கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்படுவதால், மாணவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் குழு தந்த அறிக்கையின் அடிப்படையில் 40 சதவீத பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
பாடத்திட்டங்கள் குறைப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அரசு சார்பில் தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் இம்முறை கொரோனா பரவலால் பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மத்திய அரசு செப்.21 முதல் பள்ளிகளை திறந்து 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை அவர்களின் பெற்றோர் விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்கு வந்து ஆசிரியர்களிடம் கலந்துரையாடலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட இன்னும் நீண்ட காலம் ஆகும் என்பதால், மாணவர்களுக்கு ஏற்படும் சிரமத்தை போக்க பாடத்திட்டங்களை குறைக்க பரிந்துரை செய்யப்பட்டது. அதெற்கென தமிழக அரசு சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கையின் பேரில் பாடத்திட்டங்கள் குறைப்பு பணிகளும் நடைபெற்று முடிந்துள்ளன. இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இது குறித்து விளக்கம் அளித்தார்.
இந்தியாவில் 52 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 1,174 பேர் பலி!!
அவர் பேசுகையில், தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை குழு அறிக்கையின் பேரில் 40% பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு உள்ளன. நீட் தேர்வில் 90% கேள்விகள் மாநில பாடத்திட்டத்தில் இருந்தே கேட்கப்பட்டு உள்ளதாக தெரிவித்த அமைச்சர், எத்தகைய போட்டித்தேர்வு வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என தெரிவித்தார். கொரோனா தொற்றுக்கு பிறகு விளையாட்டுத் துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படும் என கூறிய அமைச்சர், பள்ளிகளில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டு உள்ள சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யும் வாய்ப்பு இல்லை என கூறியுள்ளார்.