துரைமுருகன் அதிமுக.,விற்கு வந்தால் வரவேற்போம் – அமைச்சர் ஜெயக்குமார்!!

0

திமுக பொருளாளர் துரைமுருகன் அதிமுக.,விற்கு வந்தால் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்போம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார். திமுக கட்சியில் கடந்த சில நாட்களாக உட்கட்சி பூசல் அதிகரித்து உள்ள நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு பேசியுள்ளார்.

அமைச்சர் பேட்டி:

சென்னையில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக சற்று குறைந்து உள்ளது. இதனால் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் அதிகப்படுத்தும் வகையில் அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் மாதவரம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பு முகாமை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் நேரில் பார்வையிட்டார். பின்பு பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக தெரிவித்தார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

durai-murugan-with-stalin
durai-murugan-with-stalin

மாதவரம், ராயபுரம் பகுதிகளில் ஆரம்ப காலத்தில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். திமுக எம்எல்ஏ கு.க செல்வம் கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்ட சம்பவம் குறித்த கேள்விக்கு அமைச்சர், நீர் பூத்த நெருப்பு தற்போது தான் புகைந்து கொண்டு இருப்பதாக கூறினார்.

தமிழகத்தில் 1.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் – ரூ.50 ஆயிரம் கோடியில் தொழிற்பூங்கா!!

அதில் முதல் விக்கெட் கு.க செல்வம், அடுத்த விக்கெட் துரைமுருகன் ஆக தான் இருக்கும் என கூறிய அமைச்சர், திமுக பொருளாளர் துரைமுருகன் பொதுச்செயலாளர் ஆக முடியாத காரணத்தால் அவர் வருத்தத்தில் உள்ளார். அதிமுக.,வில் சேர துரைமுருகன் வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா என்கிற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அதிமுக ஒரு பெரிய ஆலமரம் அதிருப்தியில் உள்ள திமுக கட்சியினருக்கு அது நிழல் கொடுக்கும் என கூறினார். திராவிட இயக்கத்தின் பாசம் துரைமுருகன் மீது உள்ளது. அவர் வந்தால் அதிமுக., சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here