உலக சுகாதார அமைப்பின் புது நிர்வாக குழு தலைவராக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று காணொளிக்காட்சி மூலம் பதவி ஏற்றுக் கொண்டார்.
உலக சுகாதார அமைப்பு:
உலக சுகாதார அமைப்பின் ஐக்கிய நாடுகள் இரண்டு நாள் மாநாடு விரைவில் நடைபெற உள்ளது. தற்போது 34 பேர் உறுப்பினராக இருக்கும் உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத்தில், தலைவராக ஜப்பானைச் சேர்ந்த ஹிரோக்கி நகாடானி பதவி வகித்து வந்தார். இவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் புதிய நிர்வாக குழு தலைவரை தேர்வு செய்வதற்காக கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மே 22ம் தேதி நிர்வாக குழு தலைவராக பதவியேற்றுக் கொள்வார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனவே இன்று காணொளிக்காட்சி வாயிலாக உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவராக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பதவி ஏற்றுக்கொண்டார். 3 ஆண்டுகள் நீடிக்கும் இவரது பதவிக்காலத்தில் இந்த 34 பேர் கொண்ட குழு ஆண்டுக்கு இரண்டு முறை கூடி உலக சுகாதாரம் மற்றும் செயல்திட்டங்கள் குறித்த பரிந்துரைகளை வழங்கும்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |