10ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம், காலஅட்டவணை எப்போது வரும் – அமைச்சர் விளக்கம்..!

0
Exam
Exam

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மே 3 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு அனைத்து விதமான தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

தேர்வு எப்போது..?

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டது. இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு நடைபெறும் என தெரிவித்து உள்ளார். மாணவர்கள் அடுத்தகட்ட நிலைக்கு செல்ல 10ம் வகுப்பு மதிப்பெண் முக்கியம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. மேலும்,

  • மே 3க்கு பிறகு 10ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான காலஅட்டவணை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  • ஒவ்வொரு தேர்விற்கும் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டு தேர்வு நடைபெறும் எனவும் அமைச்சர் அவர்கள் தெரிவித்து உள்ளார்.
  • தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here