கோமியமும் சாணமும் கொரோனாவை குணப்படுத்தாது – பதிவிட்ட இருவர் கைது!!!

0

கொரோனாவை கோமியமும் சாணமும் குணப்படுத்தாது என்று கூறிய பத்திரிகையாளர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.

கோமியமும் சாணமும் கொரோனாவை குணப்படுத்தாது:

கொரோனா கொடூரமான உயிர்க்கொல்லியாக மாறிக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இதனை குணப்படுத்த மருத்துவர்கள், அறிவியல் ஆய்வாளர்கள் என பலரும் மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில்  உள்ளனர். கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என்று அறிவியல் வல்லுநர்கள் சொல்கின்றனர்.

இந்த நிலையில் பாஜகவினர் ஒரு சிலர் கோமியமும் சாணமும் கொரோனாவை குணப்படுத்தும் என்றும் கோமியத்தை குடித்தால் மற்றும் சாணத்தை உடல் முழுவதும் பூசிக்கொணடால் கொரோனா வராது என்றும்; கூறி வருகின்றனர் இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

தடுப்பூசியெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் எந்த நோய் வந்தாலும் அதை விரட்ட கோமியம் குடித்தும், சாணத்தை உடல் மீது பூசிக்கொண்டும் மக்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள். இவர்களின் கருத்தை தவறு என்று கூறும் வகையில் கோமியமும் சாணமும் கொரோனாவை குணப்படுத்தாது என மணிப்பூரைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் கிஷோர்  தனது முகநூலில் பதிவிட்டு இருந்தார்.

இதை கண்டித்த பாஜகவினர் மணிப்பூரைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் மீது புகார் அளித்துள்ளார்கள். அந்த புகாரையடுத்து கிஷோர் சந்திர வாங்கோம் மற்றும் எரேந்திரோ லிசோம்பம் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்து இருவர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here