பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஆப்பு வைத்த தமிழக அரசு – ரசிகர்கள் ஷாக்!!

0

பிரபல தனியார் தொலைக்காட்சியில் அதிக வரவேற்பை பெற்று வருவது தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. தற்போது மலையாள மொழி பிக் பாஸ் நிகழ்ச்சி சென்னையில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இதற்கு தமிழக அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.

பிக் பாஸ்:

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் பல சீசன்களாக நடைபெற்று வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை அந்தந்த மொழியின் முன்னணி நடிகர்கள் தொகுத்து வழங்குகின்றனர். அந்த வகையில் தமிழில் கமல்ஹாசன், மலையாளத்தில் மோகன்லால் போன்ற பெரிய ஸ்டார்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக கொரோனா தொற்று பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது கொரோனா நோய்பரவல் காரணமாக மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியை சென்னையில் வைத்து ஷூட் செய்ய பிக் பாஸ் குழு முடிவு செய்தது. அதன்படி தற்போது சென்னையில் உள்ள பிக் பாஸ் செட்டில் மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் பிரபலங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

கோமாளி பட நாயகிக்கு கொரோனா தொற்று உறுதி – மனமுடைந்து போன ரசிகர்கள்!!

இருந்தும் அதனை பொருட்படுத்தாமல் பிக் பாஸ் ஷூட்டிங் தொடர்ந்து நடைபெற்று வந்தது. தற்போது இதனை தொடர்ந்து தமிழக அரசு மலையாள பிக் பாஸ் குழுவிற்கு சுமார் ரூ.1 லட்சத்தை அபராதமாக விதித்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் படப்பிடிப்பு தளத்திற்கும் தற்போது அரசு சீல் வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here