தடுப்பூசி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி – நயன்தாரா வெளியிட்ட புகைப்படம் !!!

0

நடிகை நயன்தாரா தடுப்பூசி போட்டுக்கொண்டபோது எடுத்த புகைப்படத்தில், நர்ஸ் கையில் தடுப்பூசியே இல்லை என்று சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக புகைப்படம் ஒன்றை வெளியிட்ட நயன்தாரா

தடுப்பூசியால் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா :

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாக பரவி வரும் நிலையில் பலர் தடுப்பூசி போட்டு வருகின்றனர். இந்நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நேற்று தனது காதலர் விக்னேஷ் சிவன் அவர்களுடன் சென்று தனியார் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டார். அது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது.

நயன்தாரா தடுப்பூசி போட்டுக் கொண்டது குறித்து திடீரென சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுந்தது. நயன்தாராவுக்கு தடுப்பூசி போடும்போது ஊசி தெரியவில்லை என்றும், வெறும் விரல்களால் மட்டுமே ஊசி போடுவது போல் போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருப்பதாகவும் பலர் கிண்டல் செய்து வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தடுப்பூசி போட்டுக்கொண்டபோது மற்றொரு கோணத்தில் எடுக்கப்பட்டுள்ள அந்த புகைப்படத்தில், நர்ஸ் கையில் ஊசி இருப்பது தெரிகிறது.தன்னை கிண்டல் செய்த நெட்டிசன்களுக்கு சரியான பதில் கூறியதாக இணையத்தில் வைரல் ஆகி வருகிறது அந்த புகைப்படம். இதன்மூலம் நயன்தாராவின் தடுப்பூசி சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here