ஜூலியஸ் பேர் கோப்பை செஸ் போட்டியில் அருமையாக விளையாடிய இந்திய வீரரை ஸ்ரீநாத் நாராயணன் பாராட்டியுள்ளார்.
செஸ் விளையாட்டு
ஆன்லைனில் நடைபெற்று வரும் ஜூலியஸ் செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா மற்றும் கார்ல்சன் இருவரும் பலப்பரிட்சை நடத்தினர். இதில் இறுதி வரை இருவருமே சிறப்பாக விளையாடி வந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் யாரும் எதிர்பாராத வகையில் பிரக்ஞானந்தா தனது 67 வது நகர்த்தலில் கார்ல்சனுடனான போட்டியை டிரா செய்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால் இந்த போட்டியின் முடிவில் புள்ளி பட்டியலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதன்படி இதற்கு முன்னர் முதல் நடைபெற்ற போட்டியின் முடிவில் கார்ல்சன் பத்து புள்ளிகளுடன் முதல் இடத்திலும், பிரக்ஞானந்தா 9 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளனர். தற்போது இதே புள்ளிகளுடன் நீடிக்கின்றன.
ரோஹித் சர்மாவால் ஏற்பட்ட தோல்வி.., ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே.., சோகத்தில் ரசிகர்கள்!!
இந்நிலையில் இந்த போட்டி குறித்து கிராண்ட் மாஸ்டர் ஸ்ரீநாத் நாராயணன் கருத்து கூறியுள்ளார். அவர் பிரக்ஞானந்தா இந்த போட்டியை அருமையாக எதிர்கொண்டார். மேலும் அவர் இந்த போட்டியில் கையாண்ட நுணுக்கங்கள் மிகவும் அற்புதமாக இருந்தது என ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.