தமிழகத்தில் ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் அரசு மருத்துவமனைகளில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்களுக்கு மிகவும் நம்பிக்கைகரமானதாக விளங்கி வரும், அரசு ராஜாஜி மருத்துவமனையில் சமீபகாலமாக பல்வேறு அசம்பாவிதங்கள் நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இது தொடர்பாக சுகாதார செவிலியர்கள் கூறுகையில், “ராஜாஜி மருத்துவமனையில் அட்மிஷன் போட்ட பிறகு கர்ப்பிணி பெண்களுக்கு சரியான கவனிப்பு கொடுக்காததால், பலரும் இரவோடு இரவாக தனியார் மருத்துவமனைக்கு சென்று விடுகின்றனர். அதேபோல் உரிய சிகிச்சை அளிக்காமல் உயிரிழந்த 3 கர்ப்பிணி பெண்களை, டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறுகின்றனர்.” என பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். இது மதுரை வாழ் மக்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக ரயில் பயணிகளே…, திடீரென மாற்றப்பட்ட வழித்தடங்கள்…, முழு விவரம் உள்ளே!!