தமிழ் சினிமாவில் வடிவேலுடன் இணைந்து 20க்கு மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை சுமதி. ஒரு காலத்தில் பிசியாக நடித்து வந்த இவர் சமீப காலமாக சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் நடந்த பேட்டி ஒன்றில் தான் கடந்து வந்த பாதையை குறித்து பேசியுள்ளார். அதாவது, நடிகை சுமதிக்கு 16 வயது இருக்கும் போதே தனது தாய் மாமனுடன் கல்யாணம் நடந்ததாம். இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கும் நிலையில், தொடர்ந்து சுமதி மேல் சந்தேகம் பட்டதால் அவரிடம் இருந்து விலகி சென்னை வந்துவிட்டாராம்.
Enewz Tamil WhatsApp Channel
இதனை தொடர்ந்து கணவனை விவாகரத்து செய்து இன்னொரு நபரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டாராம். அதன் பின்னர் தான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வமே வந்ததாம். இதையடுத்து தனது கணவரிடம் சொல்லி, ஒவ்வொரு கம்பெனியாக ஏறி இறங்கினாராம். நீண்ட காலத்திற்கு பின்னரே அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தாம். தொடர்ந்து வடிவேலு படங்களில் வாய்ப்பு கிடைத்த நிலையில், சீரியல் பக்கமும் அவ்வப்போது நடித்து வந்தார். ஆனால் தற்போது எந்த வாய்ப்பும் இல்லாமல் அல்லல்பட்டு வருகிறாராம். சொல்லப்போனால் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத அளவுக்கு கஷ்டத்தில் இருப்பதாக கண்கலங்கி பேசியுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 7இல் நாமினேஷன் லிஸ்ட்.., வெளியேற போற நபர் இவர் தான்.., கன்பார்மான தகவல்!!