தமிழக மக்களின் போக்குவரத்து சேவையை எளிமையாக, பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் என பல்வேறு வகையான வசதிகளை போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் , தற்போது சில குறிப்பிட்ட ரயில் வழித் தடங்களில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், பராமரிப்பு பணி நடைபெறும் நாளில் மட்டும் ரயில் வழித்தடங்கள் மாற்றப்பட்டு வருகின்றன.
Enewz Tamil WhatsApp Channel
இந்த வகையில், விருதுநகர் மற்றும் நெல்லை ரயில் நிலையங்களில் இரட்டை ரயில் பாதையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனால், பாலக்காடு- திருச்செந்தூர், திருச்செந்தூர்-பாலக்காடு, செங்கோட்டை – நெல்லை, நெல்லை – செங்கோட்டை, சேரன்மாதேவி – நெல்லை ஆகிய ரயில்கள் இன்றும் நாளையும் (அக்டோபர் 3 & 4) ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், திருவனந்தபுரம் – திருச்சி இன்டர்சிட்டி ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து 40 நிமிடங்கள் தாமதமாக மதியம் 12.15 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்ட பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை…, பரபரப்பான அறிவிப்பை வெளியிட்ட கேரளா!!