விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 மூலம் அறிமுகமானவர் தான் லாஸ்லியா மரியநேசன். பிக் பாஸிற்கு பிறகு இவர் பல போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டு வந்தார். மேலும் பல படவாய்ப்புகளும் கைவசம் வைத்திருக்கும் லாஸ்லியா தற்போது கடற்கரையில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
லாஸ்லியா:
இலங்கை பெண்ணான லாஸ்லியா மரியநேசன் செய்தி தொகுப்பாளினியாக பணியாற்றியவர். அதன்பிறகு பிக் பாஸில் வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார். பிக் பாஸ் ஆரம்பத்திலேயே லாஸ்லியாவை மக்களுக்கு பிடித்துப் போனது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் அனைவரின் செல்ல பிள்ளையாகவே வலம் வந்தார். பிக் பாஸ் வீட்டின் பட்டாம்பூச்சி என்று கூட கூறி வந்தனர். லாஸ்லியாவிற்கும் சாக்ஷிக்கும் இடையே பல மோதல்கள் ஏற்பட்ட நிலையில் லாஸ்லியா மீது மக்களுக்கு சில கசப்பான எண்ணங்களே ஏற்பட்டன.
ஆரம்பத்தில் அவருக்கு இருந்த புகழ் அதன் பின் தலைகீழாக மாறியது. இவருக்கும் கவினுக்கும் இடையே காதலும் மலர்ந்தது. இது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய லாஸ்லியாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்தன.
ஹர்பஜன் சிங் உடன் Friendship படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு ஆரி உடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது அவர் நடித்த சோப்பு விளம்பரம் கூட ட்ரெண்ட் ஆனது. மேலும் அவர் பல போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
அந்த வகையில் தற்போது சிவப்பு நிற சேலையில் கடற்கரையில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை தனது வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இது வைரலாகி வருகிறது.