கன்னட நடிகரான சிரஞ்சீவி சார்ஜா அண்மையில் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இவரின் மனைவியான மேக்னா ராஜ்க்கு வளைகாப்பு விழா நடந்துள்ளது. அதில் சிரஞ்சீவி சார்ஜா நிற்பது போல கட்அவுட் வைத்துள்ளனர். இது பார்ப்பவர் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.
சிரஞ்சீவி சார்ஜா
இந்த வருடம் திரையுலகம் பல இழப்புகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது. எதிர்ப்பாராத பல இழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. எஸ்பிபி, வடிவேல் பாலாஜி, சுஷாந்த் சிங், சிரஞ்சீவி சார்ஜா என பலரும் உயிரிழந்தது திரையுலகை அதிர்ச்சியாக்கியுள்ளது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
சிரஞ்சீவி சார்ஜா அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மனைவியான மேக்னா தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்தவர். சிரஞ்சீவி அவர்கள் இறக்கும்போது மேக்னா மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இப்பொழுது 8 மாதங்கள் ஆன நிலையில் இவருக்கு வளைகாப்பு நடந்தது. அதில் அவருக்கு அருகில் சிரஞ்சீவி சிரித்து கொண்டு நிற்பது போல கட்அவுட் வைக்கப்பட்டிருந்தது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் கூறியதாவது, கவலை படாதீர்கள் அண்ணி. அண்ணன் உங்கள் வயிற்றில் குழந்தையாக இருக்கிறார். நீங்க இவ்வளவு தைரியமாக இருப்பதை பார்க்கும்போது சந்தோசமாக உள்ளது என்று கூறியுள்ளனர்.
மேலும் மேகனாவுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக முன்னர் தகவல் வெளியாகின. இதற்கு மேக்னா இந்த மாதிரியான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.