இந்தியாவில் மே 17ம் தேதியுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடியவுள்ள நிலையில் மேலும் பல நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இதனை நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி மறைமுகமாக தெரிவித்து உள்ளார்.
கட்டுப்படாத கொரோனா:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 45 நாட்களுக்கு மேலாக அமலில் உள்ள ஊரடங்கிலும் இதன் பாதிப்பு குறையவில்லை. மூன்றாம் கட்ட ஊரடங்கின் போது அறிவிக்கப்பட்ட பல தளர்வுகளும் கொரோனா பரவலுக்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது. மே 17ம் தேதியுடன் இது முடியவடைய உள்ள நிலையில் பிரதமர் மோடி அவர்கள் 5வது முறையாக மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
4ம் கட்ட ஊரடங்கு:
ஆலோசனை கூட்டத்தின் போது நாட்டில் 4வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி அவர்கள் மறைமுகமாக கூறியுள்ளார். முதலாவதாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் 2ம் கட்ட ஊரடங்கில் தேவைப்படவில்லை எனவும், 2ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் 3ம் கட்ட ஊரடங்கில் தேவைப்படவில்லை எனவும் மோடி தெரிவித்தார். எனவே ஊரடங்கால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விரிவான அறிக்கை அளிக்கவும் முதலமைச்சர்களுக்கு மோடி அவர்கள் உத்தரவிட்டு உள்ளார்.
கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரையில் அதனை தடுக்க சமூக இடைவெளியை பின்பற்றுவது தான் ஒரே வழி எனவும் மோடி அவர்கள் தெரிவித்தார். எனவே மே 17க்கு பிறகும் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்து உள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |