தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுதேர்விற்கான தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார். மேலும் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமைச்சரின் அறிவிப்புகள்:
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 1 முதல் ஜூன் 12ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஒத்திவைக்கப்பட்ட 12ம் வகுப்பு பாடங்களுக்கான தேர்வுகள் ஜூன் 4ம் தேதி நடைபெறும். இதில் 36,482 மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
11ம் வகுப்பிற்கான ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் ஜூன் 2ம் தேதி நடைபெறும் என அமைச்சர் அறிவித்து உள்ளார். அதுமட்டுமின்றி 12ம் வகுப்பு பொதுதேர்விற்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் மே 27ம் தேதி தொடங்கும் எனவும் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து தற்போது எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:
- ஜூன் 1 – மொழிப்பாடம்
- ஜூன் 3 – ஆங்கிலம்
- ஜூன் 5 – கணிதம்
- ஜூன் 8 – அறிவியல்
- ஜூன் 10 – சமூக அறிவியல்
- ஜூன் 11 – விருப்ப மொழிப்பாடம்
- ஜூன் 12 – தொழிற்பாடம்
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |