தமிழகத்தில் வரும் 31ம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் நிலையில், மேலும் என்னென்ன தளர்வுகள் வழங்கலாம் மற்றும் பண்டிகை காலம் தொடங்க உள்ளதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மருத்துவ நிபுணர் குழு மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார்.
முதல்வர் ஆலோசனை:
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு முறை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் பொழுதும், பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டது. இதனால் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் வரும் நவம்பர் 30ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் மாநிலங்களுக்கு இடையிலும், உள்ளேயும் சென்று வர இ-பாஸ் போன்ற எவ்வித அனுமதியும் தேவையில்லை எனவும் சர்வதேச விமான போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. பள்ளி, கல்லூரிகள், பயிற்சி மையங்கள் மற்றும் தியேட்டர்கள் திறக்க ஏற்கனவே மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில் கொரோனா நிலவரத்தை பொறுத்து மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
சில மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் தியேட்டர்கள் திறக்கப்பட்டு உள்ள நிலையில் தமிழகத்தில் இதுவரை அது குறித்து முடிவு செய்யப்படவில்லை. மேலும் பண்டிகை காலம் தொடங்க உள்ளதால் புறநகர் ரயில் சேவைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி பண்டிகை காலங்களிலும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், அரசு உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், மருத்துவ நிபுணர் குழு மற்றும் காணொளி வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பங்கேற்க உள்ளனர்.