தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த விலை உயர்வு மே 7 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவால் தமிழக குடிமகன்கள் கவலையில் ஆழ்ந்து உள்ளனர்.
டாஸ்மாக் திறப்பு:
நாடு முழுவதும் மே 3 முதல் மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை பல்வேறு விலக்குகள் அளிக்கப்பட்டு உள்ளன. இதனால் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் மதுபான விற்பனை தொடங்கப்பட்டு கோடிக்கணக்கில் வியாபாரம் நடைபெற்றது.
இதனால் தமிழக எல்லையில் இருக்கும் குடிமகன்கள் வேறு மாநிலங்களுக்கு மது வாங்க படையெடுத்தனர். இதனால் மே 7 முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது.
விலை உயர்வு:
இந்நிலையில் தமிழகத்தில் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்து உள்ளது. அந்த செய்திக்குறிப்பில், இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானத்தின் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வு வரியினை அரசு 15% உயர்த்தியுள்ள காரணத்தினால், சாதாரண வகை 180 ml மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 10 ரூபாய் கூடுதலாகவும், நடுத்தர மற்றும் பிரீமியம் வகை 180 ml மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 20 ரூபாய் கூடுதலாகவும் மே 7ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |