பொதுவாக வெயிலின் தாக்கத்தால் நம் முகம் பருக்கள் போன்ற சில பாதிப்புகளை சந்திக்க கூடும். இதனால் கெமிக்கல் நிறைந்த பேஸ் பேக்குகளை தேடி செல்லாமல், இயற்கையான முறையில் முகத்தின் அழகை அதிகரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
தேவையான பொருட்கள்;
- கடலை மாவு – 1 டீஸ்பூன்
- தயிர் – 2 டீஸ்பூன்
- எலுமிச்சை இலைகள் – ஒரு கைப்பிடி
செய்முறை விளக்கம்;
இந்த பேஸ் பேக் தயாரிப்பதற்கு ஒரு கைப்பிடி அளவு எலுமிச்சை இலையை கழுவி சுத்தம் செய்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும். மேலும் அதில் தயிர் மற்றும் கடலை மாவு சேர்த்து நன்றாக பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கொடைக்கானல் போறீங்களா.., அப்போ இதெல்லாம் கண்டிப்பா தேவை.., வெளியான அதிரடி அறிவிப்பு!!!
இப்போது நம் முகத்தை சுத்தமாக கழுவிய பிறகு இந்த பேக்கை அப்ளை செய்து கொள்ளவும். மேலும் ஒரு இருபது நிமிடங்களுக்கு பிறகு நம் முகத்தை கழுவிக் கொள்ளவும். இந்த பேஸ் பேக்கை வாரத்தில் ஒரு முறை பலோவ் செய்து வருவதன் மூலம் நம் முகத்தில் இருக்கும் கரும்புள்ளி நீங்கி, முகம் பளபளப்பாக மாறுவதற்கு உதவியாக இருக்கும்.