தமிழகத்தில் இந்த ஆண்டு வழக்கத்தை விட கோடை விடுமுறை அதிகமாக விடப்பட்டது. இதனால் இந்த விடுமுறையை ஈடுசெய்ய வார இறுதி நாட்களான சனிக்கிழமையும் பள்ளிகள் செயல்படும் என அறிவித்திருந்தனர். ஆனால் பருவநிலை மாற்றம் போன்ற காரணங்களால் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆடிப்பூரம் விழாவினை முன்னிட்டு கடந்த 21.07.2023 அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி(சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் போறீங்களா.., அப்போ இதெல்லாம் கண்டிப்பா தேவை.., வெளியான அதிரடி அறிவிப்பு!!!