கொரோனா தொற்று காரணமாக மக்கள் கூடும் பொது இடங்கள் அனைத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த பட ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மறுபடியும் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. அதற்காக மீனாவும், குஷ்பூவும் ஒன்றாக பயணம் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
அண்ணாத்த பட ஷூட்டிங்
தமிழில் டாப் நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நிலையாகவே இருக்கிறார். தற்போது அவர் அரசியலிலும் கால் பதித்துள்ளார். இந்நிலையில் அவர் அண்ணாத்த படத்திலும் நடித்து வந்தார். இந்த படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஏனெனில் கீர்த்தி சுரேஷ், சதிஷ், சூரி, பிரகாஷ் ராஜ் மற்றும் நயன்தாரா போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இதனாலேயே மக்களும் இந்த படத்தின் அப்டேட்காக காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் கொரோனா பரவல் வந்ததால் அண்ணாத்த பட ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
‘நான் தனிமையில் இருக்கேன், எனக்கு அன்பு தேவை’ – கதறி அழும் சித்ராவின் ஆவி!!
தற்போது அந்த ஷூட்டிங் ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே ஹைதராபாத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் தொடங்கியது. இதற்கு நயன்தாராவும், ரஜினியும் கிளம்பினர். இவர்களின் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் அதில் மீனாவும், குஷ்பூவும் இணைந்துள்ளனர்.
இந்த இரண்டு நடிகைகளும் விமான நிலையத்தில் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.