மகேஷ் பாபுவின் புதிய படத்திற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
புதிய படம்:
சரிலேறு நீக்கெவெரு படத்திற்கு பிறகு தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு அடுத்ததாக நடிக்க உள்ள படம் “சரக்கு வாரி பாட்டா”. கீதா கோவிந்தம் போன்ற படங்களை இயக்கிய பரசுராம் இயக்க உள்ளார். இந்த படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பை மகேஷ் பாபுவின் அப்பா மகேஷ் கிருஷ்ணாவின் பிறந்தநாள் ஆன மே 31 ஆம் தேதி அறிவித்தனர்.
இந்நிலையில் இந்த படத்தில் பாலிவுட் நடிகைகள் ஆன கியாரா அத்வானி, சாரா அலிகான் ஆகியோரை முடிவு செய்யலாமா என்று யோசித்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டார் என்ற செய்திகள் வெளியாகி உள்ளன. அதிகாரப்பூர்வமாக கூடிய விரைவில் செய்திகள் வெளி வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது. கொரோனா பொது முடக்கம் முடிந்ததும் படப்பிடிப்புகள் தொடங்க படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வாரம் கீர்த்திசுரேஷ் நடித்து உள்ள பென்குவின் படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.