தமிழக சட்டமன்ற தேர்தல் – திமுகவிற்கு அளித்த ஆதரவை வாபஸ் பெரும் கருணாஸ்!!

0

அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் கருணாஸ் திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். தற்போது திமுகவிற்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளார் கருணாஸ்.

கருணாஸ்:

முக்குலதோர் புலிப்படை கட்சியின் தலைவராக கருணாஸ் திகழ்கிறார். இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி செய்து திருவாடானை தொகுதியில் வெற்றி பெற்றார். மேலும் ஐந்து ஆண்டுகளாக எம்எல்ஏ.,வாக திகழ்ந்தார். தற்போது அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் இவர் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் இவர் தன்னிச்சையாக போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடிரென்று யாரும் எதிர்பாராத வகையில் இவர் தனது ஆதரவை திமுக கட்சிக்கு அளிக்கவுள்ளதாக அறிவித்தார். மேலும் திமுக கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் – அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக!!

தற்போது இதில் இருந்தும் அந்தர் பல்டி அடித்துள்ளார் கருணாஸ். அதன்படி அவர் கூறியதாவது, திமுக கட்சிக்கு எனது ஆதரவு மற்றும் தொகுதி கேட்பு குறித்து அளிக்கப்பட்ட கடிதத்தை திரும்ப பெறவுள்ளதாக அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here