அதிமுகவிற்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி போராட்டம் செய்ய திட்டம் – கருணாஸ் அதிரடி கைது!!

0
karunas

சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அதிமுகவிற்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி போராட்டம் செய்ய திட்டமிட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருணாஸ் கைது

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. முன்னதாக கூட்டணி கட்சிகளுக்கு இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகளும், பிளவுகளும் ஏற்பட்டது. அந்த வகையில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவார்ட் நிகழ்ச்சில இதுக்காகவா அழுதீங்க அஷ்வின்?? நீ நல்லா இருக்கனும் – வாழ்த்தும் ரசிகர்கள்!!

தொடர்ந்து அதிமுகவிற்கு எதிராக பொது வெளிகளிலும், பேட்டிகளிலும் எதிர்மறையான கருத்துக்களை கூறி வந்தார் கருணாஸ். இப்படி இருக்க அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய முக்குலத்தோர் புலிப்படை கட்சியினர் அதிமுக கட்சிக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட போவதாக தகவல்கள் வெளியானது. இந்த போராட்டத்தை தடுக்கும் விதமாக முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அவர்கள் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here