ஜூலை 1 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு முடிவு..!

0
1 முதல் 5 வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அனுமதியில்லை - மாநில அரசு அதிரடி உத்தரவு!!
1 முதல் 5 வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அனுமதியில்லை - மாநில அரசு அதிரடி உத்தரவு!!

கர்நாடகா மாநிலத்தில் வரும் ஜூலை 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் ஜூலை முதல் பள்ளிகளை திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் பெற்றோர்களை கலந்தாலோசித்து முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பள்ளிகள் திறப்பு:

கர்நாடகாவில் 4 முதல் 7ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் ஜூலை 7ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அம்மாநில பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. மேலும் 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 15ம் தேதியும், மழலையர் பள்ளிகள் ஜூலை 20ம் தேதியும் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இது தொடர்பான நடவடிக்கைகளை அம்மாநில கல்வித்துறை எடுத்து வருகிறது.

மேலும் ஜூன் 5ம் தேதி பள்ளிகளை திறந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஜூன் 8ம் தேதி முதல் மாணவர் சேர்க்கையை நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் பள்ளிகளை திறப்பதற்காக மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பெற்றோர்களிடம் ஆலோசித்து வரும் ஜூன் 10 முதல் 12ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here