சீனாவில் உள்ள உஹான் மாகாணத்தில் முதன் முதலில் இந்த கொரோனா தோற்று ஆரம்பித்தது. அங்கிருந்து அனைத்து நாடுகளுக்கு வேகமாக பரவியது. உலக நாடுகளையே ஸ்தம்பிக்க வைத்தது. தற்போது உலகளவில் 64 லட்சத்தை தூண்டியுள்ளது இந்த கொரோனா.
கொரோனா தோற்று
உலக பணக்கார நாடுகளே இந்த நோயில் இருந்து வெளிவர முடியாமல் தவிக்கின்றனர், மேலும் இந்த கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல உயிர்களை காவு வாங்கி வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 64 லட்சத்து 73 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், 3 லட்சத்து 81 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்கா
அமெரிக்காவில் புதிதாக 21 ஆயிரம் பேர் உட்பட 18 லட்சத்து 80 ஆயிரம் பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அங்கு 1 லட்சத்து 8 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.
பிரேசில்
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 27 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டதால், நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 56 ஆயிரத்தை தாண்டியது. அங்கு ஒரே நாளில் 1232 பேர் இறந்ததால், மொத்த இறப்பு எண்ணிக்கை 31 ஆயிரத்தை கடந்தது.
ரஷ்யா
ரஷ்யாவில் 4 லட்சத்து 23 ஆயிரம் பேருக்கும், ஸ்பெயினில் 2 லட்சத்து 87 ஆயிரம் பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உலகளவில் இதுவரை 30 லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |