மூன்றாவது அணி என் தலைமையில் தான் அமையும் – நெல்லையில் கமல்ஹாசன் பேட்டி!!

0

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி உள்ள நிலையில் மக்கள் நீதி மைய தலைவர் கமல் ஹாசன் “சீரமைப்போம் தமிழகத்தை” என்ற முழக்கத்துடன் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். சுற்று பயணத்தின் நான்காவது நாளான இன்று அவர் நெல்லையில் உள்ள அன்பு நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முதலாவதாக அவர் “சீரமைப்போம் தமிழகத்தை “என்ற தலைப்பின் கீழ் இளைஞர்கள் மற்றும் பெண்களுடன் கலந்துரையாடினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் 2021ம் ஆண்டு வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் தலைமையிலான மூன்றாவது அணி கண்டிப்பாக நல்லவர்களுடன் அமையும். ஓ.வை.சி யுடனான கூட்டணி அமைப்பது குறித்து எந்தவித பேச்சு வார்த்தையும் இன்னும் நடக்கவில்லை. நடிகர் ரஜினியுடன் கூட்டணி அமைப்பது போல் சூழ்நிலை வந்தால் யார் முதல்வராக இருக்க வேண்டும் என்பதை நிச்சயம் கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம்.

தொடர்ந்து மக்கள் நீதி மைய கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்படாத நிலையில் இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களில் நீதி மன்றத்தை நாடுவோம். வரும் சட்ட மன்ற தேர்தலில் மக்கள் கண்டிப்பாக மாற்றத்தை நிகழ்த்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு மக்கள் மீது உள்ளது. நாங்கள் எந்த கட்சிக்கும் பி டீம் இல்லை. நாங்கள் எப்போதுமே ஏ டீம் தான்.

தொடங்கியது கேரள உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை!!

எங்கள் கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை மக்களுக்கு இலவசமாக வழங்குவது போன்ற திட்டங்கள் இடம்பெறும். தி.மு.க. வுடன் உங்கள் கூட்டணி அமையுமா? என்ற கேள்விக்கு கூட்டணி குறித்து பேசுவதற்கான நேரம் இதுவல்ல என்று கூறியுள்ளார். மேலும் மனசாட்சிப்படி சட்டமன்ற தேர்தலில் தான் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட இருப்பதாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here