சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் வழங்கவில்லை என அறிவிப்பு வந்த நிலையில் தற்போது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பெரும் நெருக்கடியில் தள்ளப்பட்டு உள்ளார்.
மக்கள் நீதி மய்யம்:
தமிழகத்தில் வருகிற மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்திற்கு தேவையான அனைத்து வேலைகளிலும் தீவிரம் காட்டி வருகின்றனர். தேர்தல் ஆணையமும் வாக்காளர் பட்டியல், வாக்காளர் அட்டைகளில் உள்ள பிழைகளை சரிபார்த்தல் போன்ற வேலைகளில் இறங்கியுள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அடுத்து வரும் தேர்தலில் இருபெரும் ஆளுமை தலைவர்களான கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லாமல் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் சந்திக்கின்றன. இந் நிலையில் சட்டசபை தேர்தலுக்காக அரசியல் கட்சிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கி உள்ளது. அதன்படி தமிழகம், புதுச்சேரியில் டிடிவி தினகரன் அவர்களின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச்லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.
ஆனால் தமிழகத்தில் 234 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் வழங்கவில்லை, இது குறித்து வெளியிட்ட தகவலின் படி டார்ச்லைட் கேட்டு மக்கள் நீதி மையம் தாமதமாக தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்ததாக தகவல் கிடைத்துள்ளது.
பொங்கல் பரிசுடன் வருகிறது ‘ஆவின் நெய் பாட்டில்’!!
தற்போது, மக்கள் நீதி மய்யத்தின் ட்விட்டர் பக்கத்தில் கூட டார்ச் லைட் சின்னம்தான் இடம்பெற்றிருக்கிறது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சீரமைப்போம் தமிழகத்தை என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தை நேற்று மதுரையில் தொடங்கி உள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் டார்ச்லைட் சின்னத்தை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்துள்ள நிலையில் சின்னத்தை இழந்துள்ளது. புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கக் கூடிய நெருக்கடியில் தள்ளப்பட்டு உள்ளது.