பொங்கல் பரிசுடன் வருகிறது ‘ஆவின் நெய் பாட்டில்’ – தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ்!!

0

தமிழ்நாட்டு மக்களுக்கு கடந்த சில வருடங்களாக பொங்கல் பரிசு நியாய விலைக்கடைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த வருடமும் வழங்கப்பட உள்ள நிலையில் தமிழக அரசுடன் இணைந்து ஆவின் நிறுவனமும் பொங்கல் பரிசுடன் நெய் வழங்கப் போவதாக அறிவித்துள்ளது.

பொங்கல் பரிசோடு ஆவின் நெய்:

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்குவது வழக்கம். பொங்கல் பரிசில் பச்சரிசி, சர்க்கரை, 5 கிராம் ஏலக்காய், தலா 20 கிராம் முந்திரி- திராட்சை, கரும்பு துண்டு ஆகியன வழங்கப்படும். இந்த வருடம் அந்த பொங்கல் பரிசுடன் தலா ஒரு நெய் பாட்டில் வழங்க போவதாகவும், மதுரை ஆவின் நிறுவனம் அதற்கான உற்பத்தியை தொடங்கியுள்ளதாகவும் அரசு வட்டாரங்களில் கூறப்படுகிறது.

ஆவின் நிறுவனம்:

மதுரை ஆவின் நிறுவனம் வங்கக்கடலில் உருவான நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் புயல் நிவாரணமாக பால் பவுடர் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. அவ்வுத்தரவின்படி, கடந்த ஒரு வாரக் காலத்தில் 500 கிராம் பாக்கெட்டுகளாக 19 மெட்ரிக் டன் பால் பவுடர், தயார் செய்யப்பட்டு புயல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று மதுரை ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிறுவனத்தின் சார்பாக சுமார் 2 இலட்சத்து 52 ஆயிரம் நெய் பாட்டில்கள் மதுரை, தேனி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளன. மேலும், தற்போது வரை 90 ஆயிரம் பாட்டில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன, 1 லட்சத்து 62 ஆயிரம் பாட்டில்கள் தயாரிக்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு இரவு பகலாக நடைபெற்று வருகிறது என மதுரை ஆவின் நிர்வாகம் தெரிவித்தது.

அமெரிக்க அதிபர் ஆக ஜோ பைடன் தேர்வு!!

இந்த வருடம் பொங்கல் பரிசு தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, 5 கிராம் ஏலக்காய், தலா 20 கிராம் முந்திரி- திராட்சை, கரும்பு துண்டு, ரூ.1000 ரொக்கம் ஆகியவற்றோடு ஆவின் நெய் வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here