உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பயத்தில் இருந்து மீள்வதற்கான சிறந்த வழியை நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகை காஜல் அகர்வால் கூறியதாவது..,
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். எனக்கு கிடைத்த இந்த ஓய்வு நேரத்தை நல்லபடியாக பயன்படுத்தி வருகிறேன். விளையாடுவது, புத்தகங்கள் படிப்பது ஒரு புறம் இருந்தாலும், உடற்பயிற்சிக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்க வேண்டும். உடற்பயிற்சி கூடங்கள் அனைத்தையும் மூடிவிட்டதால் உடற்பயிற்சிகள் செய்யாமல் இருக்கலாம் என்று பலர் சொல்கிறார்கள்.
சினிமாவை விட்டு வெளியேறும் சியான் விக்ரம்..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
இந்த சமயத்திலும் வயிறு, கால் தொடர்பான யோகாசனங்களை செய்து வருகிறேன். உடற்பயிற்சிகள் செய்து கொண்டே இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களிடம் பேசுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தியானம் செய்யுங்கள்..!
மேலும் வீட்டில் இருப்பதால் ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து மீளவும் கொரோனா வியாதி வந்து ஏதோ ஆகிவிடப்போகிறது என்ற பயத்தில் இருந்து விடுபடவும் தியானம்தான் சிறந்த வழி. எனவே அதை எல்லோரும் செய்யுங்கள்.
படுகிளாமரான போட்டோஸை பதிவிட்ட மீரா மிதுன் – கழுவி ஊற்றும் ரசிகர்கள்..!
6 மாதமாக நான் அணியாமல் வீட்டில் சேர்த்து வைத்திருந்த உடைகளை பீரோவில் இருந்து அகற்றி விட்டேன். எனக்கு சமையல் செய்வது மிகவும் பிடிக்கும். இந்த நேரத்தில் புதுசுபுதுசாக சமையல் செய்து வருகிறேன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |