அனைத்து இன்ஜினியரிங் கல்லூரிகளின் விடுமுறை நீட்டிப்பு – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

0
Anna univ
Anna univ

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் நாளையுடன் முடிய இருந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மாநிலத்தின் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கான விடுமுறையையும் நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு:

தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு, இலவச பொருட்கள், ரூ.1000 நிதியுதவி – தமிழக அரசின் அறிவிப்புகள்.!

  • தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதால் தமிழகத்தின் அனைத்து பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளின் விடுமுறையை ஏப்ரல் 30 வரை நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
  • தமிழகத்தில் ஏப்ரல் 14ம் தேதி வரை இருந்த கல்லூரிகள் விடுமுறை ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
  • ஏப்ரல் 30ம் தேதி வரை அனைத்து விதமான செமஸ்டர் தேர்வுகளும் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  • இந்த உத்தரவானது அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள் உட்பட அனைத்து இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here