விமான நிலையத்தில் வைரத்தோடை தொலைத்த பிரபல நடிகை – உதவி கேட்டு ட்வீட்!!

0

நடிகை ஜூஹி சாவ்லாவின் வைரத்தோடு மும்பை விமான நிலையத்தில் தொலைந்துள்ளது. இதற்காக அவர் பொது மக்களிடம் உதவி கேட்டு ட்வீட் செய்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நடிகை ஜூஹிசாவ்லா 1984ம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்றவர். இவர் தனது திரையுலக பயணத்தை ஹிந்தி திரையுலகின் மூலம் ஆரம்பித்தார். இவர் பல உச்சகட்ட பிரபலங்களுடன் நடித்துள்ளார். இவர் தான் ஏற்று நடித்த கதாபாத்திரங்களின் மூலம் மக்களின் மனதில் தனி இடத்தை பெற்றுள்ளார். 80 மற்றும் 90களில் ஹிந்தி திரை உலகின் உச்சத்தில் இருந்தார்.

இவர் தான் நடித்த பல படங்களுக்காக இந்திய அரசின் பல முக்கிய விருதுகளை பெற்றுள்ளார். நடிப்பதை தவிர திரைப்படங்கள் தயாரித்தும் உள்ளார். தற்போது அவர் பல ரியாலிட்டி ஷோ களுக்கு நடுவராகவும் பங்கெடுத்து வருகிறார்.

மறைந்த நடிகை சித்ராவின் முதல் திரைப்படம்!!

இந்நிலையில் ஜூஹி சாவ்லா இன்று காலை மும்பையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அமீரக கவுண்ட்டர் அருகில் தனது வைரத்தோடை தொலைத்து உள்ளார். அது தனது விருப்பமான தோடு என்றும் அதை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும், தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இதை கண்டுபிடித்து தருமாறும் பொது மக்களிடம் உதவி கேட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here