சென்னை ஐஐடியை அடுத்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே கல்லூரிகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுமாறு அரசு அறிவுறுத்தி உள்ள நிலையில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சென்னை ஐஐடி-யில் கொரோனா பாதிக்கப்பட்டு மாணவர்கள், பணியாளர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஐஐடி-ல் செயல்பட்டு வரும் 9 விடுதி மற்றும் 1 விருந்தினர் மாளிகையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாணவர்களும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என கல்லூரி நிர்வாகம் சார்பாக அறிவிப்பு வெளியானது.
தற்போது சென்னை ஐஐடியை தொடர்ந்து சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு கொரோனா அறிகுறி இருந்த காரணத்தால் அந்த மாணவர்கள் தனிமை படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி வழங்கவில்லை!!
கொரோனா ஊரடங்கு காரணமாக 9 மாத காலமாக கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் டிசம்பர் 7 அன்று இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டன. தற்போது மாணவர்களுக்கு கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொடர்ந்து கல்லூரிகள் செயல்படுவது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.