தற்கொலை தொடர்பாக சித்ராவின் பெற்றோர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் ஆர்டிஓ போலீசார். சித்ரா தற்கொலை செய்யும் முன் போன் செய்தாரா? என்ன பேசினார் என அவரது தாயிடம் அடுக்கடுக்காக கேள்விகள் கேட்கப்படுகிறது.
சித்ரா தற்கொலை:
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த வாரம் ஹோட்டலில் தனது சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலைக்கான உண்மையான காரணம் தெரியாமல் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அதற்கான காரணத்தையும் கண்டுபிடிக்க கோரி போலீசாருக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அவர் தற்கொலை செய்யும் போது அவருடன் அவருக்கு கணவராக போகும் ஹேமந்த் உடன் இருந்தார். இதுகுறித்து அவரை போலீசார் கடந்த 5 நாட்களாக விசாரணை செய்து வருகிறார்கள். அவரது பதில்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், முன்னுக்கு பின் முரணான பதில்களாகவும் இருக்கிறது என்று போலீசார் கூறுகிறார்கள். தனக்கும், சித்ராவுக்கும் 2 மாதங்களுக்கு முன் ரெஜிஸ்டர் திருமணம் நடந்தது என ஹேமந்த் கூறியுள்ளார் ஆனால் அதற்க்கான ஆதாரம் வரும் வரை நமத்து முடியாது என போலீசார் தெரிவித்துள்ளார்கள்.
ஆர்டிஓ விசாரணை:
ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ திவ்யஸ்ரீ விசாரணையை தொடங்கி உள்ளார். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வருவாய்த்துறை அலுவலகத்தில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. சித்ராவின் பெற்றோர்தான் முதலில் விசாரிக்கப்படுகிறார்கள். இதனையடுத்து ஆர்டிஓ போலீசார் சித்ராவின் தந்தை தாய் என அனைவரிடமும் விசாரணை துவங்கியுள்ளார்கள். அப்பா காமராஜ், அம்மா விஜயா, சகோதரி சரஸ்வதி என அனைவரிடமும் தனி தனியே விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விமான நிலையத்தில் வைரத்தோடை தொலைத்த பிரபல நடிகை – உதவி கேட்டு ட்வீட்!!
தன் மகள் மரணத்துக்கு யார் காரணம் என கண்டுபிடியுங்கள் என சித்ராவின் தந்தை ஏற்கனவே புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் வரதட்சணை கொடுமை நடந்துள்ளதா என்று ஆர்டிஓக்கு விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படியே இன்று ஆர்டிஓ விசாரணை நடந்து வருகிறது. கல்யாணத்துக்கு சித்ராவுக்கு 50 சவரன் நகையும், ஹேமந்த்துக்கு 20 சவரன் நகையும் தருவதாக சித்ராவின் பெற்றோர் கூறியிருந்தனர். அது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் ஆர்டிஓ போலீசார்.
நிச்சயதார்த்த போட்டோக்களும் ரெஜிஸ்டர் திருமண சான்றிதழும் விசாரணையின்போது சமர்ப்பிக்கப்படும் என தெரிகிறது. தற்கொலைக்கு முன்பு சித்ரா பேசியது என்ன? வாக்குவாதம் நடந்தது உண்மைதானா போன்ற கேள்விகள் சித்ராவின் அம்மா விஜயாவிடம் கேட்கப்படுகின்றன.