இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய மாடல் அழகி ஜெசிகா லால் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி மனுசர்மா இன்று விடுதலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாடல் அழகி கொலை:
1999ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி டெல்லியில் உள்ள டாமரின்ட் உணவகத்தில் வைத்து ஜெசிகா லால் எனும் மாடல் அழகி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலையாளியான காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் வினோத் சர்மாவின் மகன் மனு சர்மா முதலில் கீழமை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இதனால் நாடு முழுவதும் போராட்டம் வெடித்த நிலையில் உயர்நீதிமன்றம் விசாரித்து ஆயுள் தண்டனை வழங்கியது. இதனால் மனு சர்மா திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்டு 17 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ள நிலையில் மனு சர்மாவை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் ஒப்புதல் வழங்கியுள்ளார். நன்னடத்தை அடிப்படையில் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய பரிந்துரை செய்யும் டெல்லி தண்டனை மறுஆய்வு வாரியம் மனு சர்மாவை விடுதலை செய்ய பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |