ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் நடமாட்டம் உள்ளதா என்று சோதனை செய்த பிறகு 4ஜி சேவைகளை மக்களுக்கு வழங்கலாமா என்பது குறித்து உச்சநீதிமன்றத்திற்கு பதில் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது மத்திய அரசு.
4ஜி சேவை ரத்து:
ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் கடந்த ஆண்டு 370 ஆம் சட்டத்தை தடை செய்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் எல்லை பகுதிகளை யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
அப்போது, மத்திய அரசு எல்லை பகுதிகளில் அதிவேக இனைய சேவையை மத்திய அரசு ரத்து செய்து இருந்தது. அந்த காலக்கெடு முடிந்து ஒரு வருடம் ஆக போகிறது. ஆனால், தற்போது வரை அங்கு தடை நீடித்து கொண்டு வருகிறது.
உச்சநீதி மன்றம் கேள்வி:
இப்படியான நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றம் காஷ்மீர் நிர்வாகத்திற்கு கேள்வி ஒன்றை எழுப்பியது. அது என்னவென்றால், எப்போது அதிவேக இனையசேவையை வழங்க போகிறீர்கள் என்பதாகும்.
ஆனால், கடந்த சிலநாட்களுக்கு முன் தான் துணை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமிக்கப்பட்டர், அதனால் இந்த இணைய அசேவை வழங்குவது தொடர்பான அறிவுறுத்தல்களுக்கு காலஅவகாசம் வேண்டும் என்று கோரியுள்ளது.
பெண் பிள்ளைகளுக்கும் சொத்தில் சமபங்கு உண்டு – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
மேலும் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளில் தான், அதிவேக இனைய சேவை வழங்க முடியும் என்றும் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு பிறகு சோதனை நடத்திய பிறகு வழங்கப்படுமா என்று கூற உள்ளது மத்திய அரசு. அதே போல் அடுத்த ரெண்டு மாதங்களுக்கு பிறகு, அங்கு உள்ள சூழ்நிலை குறித்து மறுஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.