கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்து உள்ளது. மேலும் அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்பட்டு உள்ளது.
உடல்நிலை கவலைக்கிடம்:
புதுடில்லியில் உள்ள இராணுவ ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பிரணாப் முகர்ஜி, “உயிர் காக்கும் மூளை அறுவை சிகிச்சைக்கு” உட்பட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
பெண் பிள்ளைகளுக்கும் சொத்தில் சமபங்கு உண்டு – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீ பிரணாப் முகர்ஜி ஆகஸ்ட் 10 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ராணுவ மருத்துவமனையில் (ஆர் அண்ட் ஆர்) டெல்லி கான்ட்டில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை பரிசோதனையின் போது அவருக்கு ஒரு பெரிய மூளை உறைவு தெரியவந்தது, அதற்காக அவர் அவசரகால உயிர் காக்கும் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அறுவை சிகிச்சை முடிந்து மூச்சு விடுவதில் தொடர்ந்து சிரமப்படுகிறார். எனவே வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தொற்றும் உறுதியாகி உள்ளதால் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது.