மதுரையில் நட்சத்திர சொகுசு விடுதியான ஹெரிடேஜ் ஹோட்டலில் அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றன. இது மதுரை மற்றும் அல்லாமல் சென்னையிலும் இச்சோதனை நடைபெற்று வருகிறது.
வருமானவரி துறையினர் சோதனை:
மதுரையின் கோச்சடை அருகில் உள்ள ஹெரிடேஜ் ஹோட்டலில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றன. இந்த ஹெரிடேஜ் ஹோட்டல் 40 ஆண்டுக்கு மேலாக இயங்கி வரும் நிலையில் இன்று பண பரிவர்த்தனை மற்றும் வரி முறைகேடு நடந்தாக புகார் எழுந்து உள்ள நிலையில் வருமான வரித்துறையில் உள்ள புலனாய்வு பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மதுரையில் ஹெரிடேஜ் குழுமத்திற்கு சொந்தமான 5 இடங்களிலும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 4 அதிகாரிகள் கார்களில் வந்து சோதனை நடத்தி வருகின்றன. விடுதியில் தங்கி இருந்த வாடிக்கையாளர்களின் கார்களையும் சோதனை செய்து அனுப்பி வைத்தனர்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
இனி யாரும் ஹோட்டல் உள்ளேயும் வெளியவும் செல்ல கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நடைபெற்ற சோதனையில் சொத்து, வரி உள்ளிட்டவை சம்பந்தமான பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அடுத்த கட்ட சோதனை மேலும் நடைபெரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.