பேரனை வைத்து இயக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் – முட்டுக்கட்டை போடும் விஜய்!!

0

நடிகர் விஜய்யின் அப்பாவும், இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் தனது பேரனை வைத்து ஒரு படத்தை இயக்கப்போகிறாராம். இவர் ஏற்கனவே இயக்கியுள்ள படத்தின் இரண்டாம் பாகத்தில் அவரது பேரன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர்

தமிழ்ப்படங்களில் முன்னணி இயக்குனராக இருந்தவர் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர். கிட்டத்தட்ட 70 திரைப்படங்களுக்கும் மேலாக இயக்கியுள்ள எஸ்.ஏ சந்திரசேகர், தற்போது அவரது பேரன் அதாவது நடிகர் விஜய்யின் மகனை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

1978ம் ஆண்டு ‘அவள் ஒரு பச்சைக்குழந்தை’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஏ சந்திரசேகர். தொடர்ந்து ‘சாட்சி’, ‘வெற்றி’, ‘புது யுகம்’, ‘நான் சிவப்பு மனிதன்’, ‘நிலவே மலரே’ உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் எஸ்.ஏ சந்திரசேகர்.

தமிழில் பல முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படங்களை இயக்கியுள்ளார் இவர். தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் படங்களை இயக்கியுள்ளார். இவரது மகன் தான் தற்போது தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர், இளையதளபதி விஜய். எஸ்.ஏ சந்திரசேகர் கடைசியாக ‘கேப்மாரி’ என்ற திரைப்படத்தை இயங்கியிருந்தார்.

கமல்ஹாசன், ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு – தேர்தல் காரணமா??

முற்றிலும் அடல்ட் திரைப்படமாக உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், நடிகர் ஜெய் மற்றும் நடிகை அதுல்யா ரவி ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது ‘கேப்மாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இவர் இயக்க உள்ளதாகவும், அந்த படத்தில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயை நடிக்க வைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் சஞ்சயை நடிக்கவைப்பதில்லை என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here