இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து உள்ளதைத் தொடர்ந்து பல்வேறு போட்டிகள் மற்றும் கூட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இதனை பார்வையாளர்கள் இல்லாமல் நடத்துங்கள் என மத்திய அரசு பிசிசிஐ-க்கு தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் மட்டுமே இந்த வைரஸ் 73 பேரை இதுவரை பாதித்துள்ளது. இவர்களில் 56 பேர் இந்தியர்கள், 17 பேர் வெளிநாட்டினர் இந்த காரணத்தால் மக்கள் அதிகளவில் எங்கும் கூடவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.
பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம்..!
ஐபிஎல் போட்டி நடத்துவது குறித்து ஆலோசனை நடத்திய மத்திய அரசு ஐபிஎல் உட்பட எந்த போட்டிக்கும் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என்று தெரிவித்து உள்ளது. மேலும் ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகளை நடத்துமாறும் அறிவுரை வழங்கி உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |