எல்லை மீறினால் கணக்கு முடக்கம் – இன்ஸ்டாகிராம் அதிரடி அறிவிப்பு!!

0

தற்போது இன்ஸ்டாகிராம் செயலி ஓர் அதிரடியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி இன்ஸ்டாகிராம் செயலியில் எல்லை மீறிய தகவலை அனுப்பினால் அவரகளது கணக்கு முடக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராம்:

சமூக வலைதள செயலில்களில் மிக முக்கியமான ஒன்றாக செயல்படுகிறது இன்ஸ்டாகிராம் செயலி. இந்த செயலியை உலகம் முழுவதும் உள்ள பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த செயலி பயனாளர்களின் தேவைக்கேற்ப பல அப்டேட்களை செய்து வருகிறது. இதனாலயே பயனாளர்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த செயலி மூலம் சிலர் சில தவறான தகவலை அனுப்பி வருகின்றனர் என்ற தகவல் வெளியாகி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதில் குறிப்பாக இங்கிலாந்து கால்பந்து வீரர்களை இனவெறி மூலம் பலர் தவறான பல கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். இதற்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் ஓர் முடிவை எடுத்தது. இதுபோன்ற செயலை தடுக்கும் வகையில் குறுஞ்செய்தியாக தவறான தகவல்களை பரிமாறுபவர்கள், அதன்பிறகு தனது கணக்கில் இருந்து மற்றவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பமுடியாத அளவிற்கு இன்ஸ்டாகிராம் செய்தது.

தினகரனுக்கு எல்லாருக்கும் ஊற்றி கொடுப்பது தான் தொழில் – அமைச்சர் காட்டம்!!

ஆனால் தற்போது தவறான குறுஞ்செய்திகளை அனுப்புவரின் கணக்கு முடக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளது. எனவே பயனாளர்கள் அனைவரும் கவனமாக செய்திகளை அனுப்ப வேண்டும் என்று இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here