பிரபல தனியார் விமான நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் புதிதாக 24 உள்நாட்டு விமானங்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதற்கான புதிய விமான வழித்தடங்களை அறிவித்துள்ளது.
உள்நாட்டு விமானங்கள் இயக்கம்
பெருநகரங்களுக்கும் சிறுநகரங்களுக்கும் இடையேயுள்ள இணைப்பை மேம்படுத்தும் வகையில் 24 உள்நாட்டு விமானங்கள், புதிதாக இயக்கப்பட உள்ளதாக பிரபல தனியார் விமான நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. மக்களுக்கிடையேயான விமான போக்குவரத்தை அதிகப்படுத்தும் நோக்கில், சிறிய ஊர்களுக்கும் பெரிய நகரங்களுக்கும் விமான சேவையை துவங்கவுள்ளதாக அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதன்படி புதிதாக இயக்கப்படவுள்ள விமானங்கள், பிப்ரவரி 12 ம் தேதி முதல் 24 ம் தேதிக்குள் துவங்கும் என ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் இந்த விமான போக்குவரத்து அஜ்மீர்-மும்பை, அகமதாபாத்-அமிர்தசரஸ் ஆகிய நகரங்களை இணைக்கும் முதல் விமான நிறுவனம் ஆகும். தொடர்ந்து 4 பருவகால சிறப்பு விமானங்களுடன், ஜெய்சால்மர் நகரத்தை டெல்லி மற்றும் அகமதாபாத்துடன் இணைக்கிறது இந்த விமான சேவை.
தினகரனுக்கு எல்லாருக்கும் ஊற்றி கொடுப்பது தான் தொழில் – அமைச்சர் காட்டம்!!
இதுதவிர பெங்களூர் – அகமதாபாத், கொல்கத்தா – குவஹாத்தி மற்றும் குவஹாத்தி-டெல்லி வழித்தடங்களில் புதிதாக விமான சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. பருவகால விமானங்கள் பிப்ரவரி 12 முதல் மார்ச் 13 வரை இயங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.