விழுப்புரத்தில் இன்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது தினகரன் தான் எனக்கு ஊத்தி கொடுத்தார். அவரது தொழிலே ஊத்தி கொடுப்பது தான் என்று காட்டமாக பேசியுள்ளார்.
சிவி சண்முகம்:
தமிழகத்திற்கு சசிகலா வந்த பிறகு அதிமுக நிர்வாகிகள் பலர் கொதித்துள்ளனர். மேலும் பல விதமான கருத்துக்கள் தற்போது வெளிப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, இனி ஒருபோதும் தினகரனையும் சசிகலாவையும் அதிமுக கட்சியில் சேர்க்க முடியாது. இந்த கட்சி ஒன்றரை கோடி மக்களால் உருவாக்கப்பட்டது. அதனை ஒருபோதும் சசிகலாவின் குடும்பம் பிடிக்க முடியாது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் சசிகலாவிற்கு ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது, தினகரன் குடும்பத்தில் இருந்து சசிகலா தன்னை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். தினகரனை நம்பி தான் சசிகலா ஆட்சியையும் கட்சியையும் விட்டு சென்றார். ஆனால் ஒரே மாதத்தில் அதனை மூடிவிட்டனர். மேலும் தினகரன் தன்னை பற்றி நிதானமாக பேசுகிறாரா என்று கேட்டுள்ளார்.
உத்ரகண்ட் பனிப்பாறை சரிவு – வெள்ளப்பெருக்கினால் மீட்புப்பணிகள் நிறுத்தம்!!
அவர் தான் எனக்கு ஊத்தி கொடுத்தார். கூவத்தூரில் கூட அவர் தான் எங்களுக்கு ஊத்தி கொடுப்பர். அது தான் அவரது வேலை என்று காட்டமாக பேசியுள்ளார். மேலும் இதனை தினகரனை இல்லை என்று கூற சொல்லுங்கள் பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார்.