இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதை தொடர்ந்து 50 ஓவர் உலகக் கோப்பை, அயர்லாந்து தொடர், ஆசிய கோப்பை ஆகிய தொடர்களில் பங்கேற்க உள்ளது. ஆனால் இதுவரை நடைபெற்ற தொடர்களில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான பும்ரா, கே எல் ராகுல், ஸ்ரேயாஸ், ரிஷப் பந்த் ஆகியோர் இடம் பெறவில்லை.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனால் உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பை தொடரில் இவர்கள் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. இந்நிலையில் பும்ரா தற்போது நல்ல உடல் நலத்துடன் தீவிர பயிற்சி பெற்று வருவதாக கூறப்படுகிறது. அதேபோன்று கே எல் ராகுல் ஸ்ரேயாஸ் இருவரும் தற்போது தீவிர வலை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் “வாரிசு சான்றிதழ்” வழங்குவதற்கான அரசாணை திருத்தம்., ஐகோர்ட் உத்தரவு!!!
இத்துடன் சமீபத்தில் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்தும் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் கண்டு தனது பயிற்சியை தொடங்கி இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியது. இதனால் இவர்கள் நிச்சயம் உலக கோப்பை, ஆசிய கோப்பை தொடரில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.