இந்தியன் ஆயில் நிறுவனம் வாட்ஸ்ஆப் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் கேஸ் முன்பதிவு செய்யும் முறை மேலும் எளிதாகி உள்ளது.
1.36 கோடி இணைப்புகள்!!
இந்திய ஆயில் நிறுவனத்தில் தற்போது தொலைபேசி மூலம் கேஸ் முன்பதிவு செய்யப்படுகிறது. இதனை மேம்படுத்தும் முயற்சியில் தற்போது இந்த புதிய வசதி கொண்டுவரப்பட்டு உள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தற்போது 1.36 கோடி கேஸ் இணைப்பு பெற்ற பயன்பாட்டாளர்கள் உள்ளனர். அவர்கள் வாட்ஸ்ஆப் மூலம் இனி கேஸ் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாட்ஸ்ஆப் மூலம் முன்பதிவு செய்ய 75888 88824 என்ற எண்ணிற்கு தங்களுடைய பதிவு செய்யப்பட்ட எண்ணிலிருந்து மெசேஜ் அனுப்பி கேஸ் சிலிண்டர் பெற்றுக்கொள்ளலாம்.
மானியத் தொகை குறித்து அறிய!!
சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத் தொகை குறித்து அறிவதில் வாடிக்கையாளர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே மானியத் தொகை குறித்த விபரம் இனி குறுஞ்செய்தி மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழகம் மற்றும் புதுச்சேரி இந்தியன் ஆயில் நிர்வாக இயக்குநர் பி.ஜெயதேவன் தெரிவித்தார். மேலும் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ் சப்ளை செய்யும் வசதி அடுத்த ஆண்டு முதல் செயல்பட உள்ளது எனவும் கூறினார்.
அதுமட்டுமில்லாமல் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்தியில் சரியான கட்டணம், சரியான எடை, முறையான சீல் மற்றும் முறையான சேவை போன்றவை குறித்து அறிந்து கொள்வதற்கான வசதியும் இடம்பெற்று இருக்கும்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |