13 வது ஐ.பி.எல் தொடர் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் வருகிற 24 ம் தேதி ஐ.பி.எல் அணிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
கொரோனாவால் தள்ளிப்போன ஐபிஎல்..!
13 வது ஐ.பி.எல் போட்டிகள் மார்ச் 29ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் போட்டிகளை ஒத்திவைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, ஏப்ரல் 15 தேதி ஐ.பி.எல் போட்டிகள் நடக்கும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் மத்திய அரசு விதித்த கட்டுப்பாடுகளால் விளையாட்டு வீரர்கள் ஏப்ரல் 15ம் தேதி வரை ஐ.பி.எல் போட்டி தொடரில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை..!
இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் மற்றும் ஐ.பி.எல். அணி உரிமையாளர்கள் வருகிற 24 ம் தேதி போட்டி தொடர் குறித்து ஆலோசிக்க உள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் வாரிய அலுவலகம் மூடப்பட்டுள்ளது. அதனால் ஆலோசனை கூட்டத்தை செல்போன்களில் ‘கான்பரன்ஸ் கால்’ மூலம் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் அணி உரிமையாளர்கள் ஆலோசிக்க முடிவு செய்யவுள்ளனர்
இதற்கிடையே ஐ.பி.எல். போட்டி நடத்துவது குறித்து ஏப்ரல் 15-ந் தேதிக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். இதனால் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறுமா எனும் சந்தேகம் எழுந்துள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |