இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. தற்போது வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இந்தியாவில் 298 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 62 பேரை இந்த வைரஸ் தாக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குணமடைந்த 22 பேர்..!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் அதன் வீரியம் குறையவில்லை. தற்போது வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்களின் படி இந்தியாவில் 271 பேருக்கு கொரோனா வைரஸின் தாக்கம் உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் 22 பேர் அதில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உளள்து.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிதாக 3 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தாக்கம் உறுதிசெய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |