இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று ஹாமில்டனில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்து இருந்தது.
இந்திய அணி சார்பில் கே.எல் ராகுல் 29 (17) ரன்களில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா சிறப்பாக ஆடி அரை சதம் கடந்து 65 (40) ரன்களில் ஆட்டமிழந்தார். சிவம் துபே 3 (7) ஏமாற்றம் தந்தார்.
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோஹ்லி 38 (27), ஷ்ரேயஸ் ஐயர் 17 (16) விக்கெட்டுகளை இழந்தனர். மனிஷ் பாண்டே 14 (6), ஜடேஜா 10 (5) களத்தில் இருந்தனர்.
நியூஸிலாந்து அணியில் அதிகபட்சமாக பென்னெட் 3 விக்கெட் வீழ்த்தினார்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
இதைத்தொடர்ந்து நியூஸிலாந்து அணி 180 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது. நியூஸிலாந்து சார்பில் மார்ட்டின் குப்தில் 31 (21), காலின் முன்ரோ 14 (16) அவுட்டாகினர். பின்னர் சான்ட்னர் 9 (11) போல்டனார், கிராண்ட்ஹோம் 5 (12) நிலைக்கவில்லை. மறுபுறம் அதிரடியாக விளையாடிய கேப்டன் வில்லியம்சன் 95 (48) ரன்களில் அவுட்டானார்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
20 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 179 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்திருந்தனர். ராஸ் டெய்லர் கடைசி பந்தில் போல்டு ஆனதால் போட்டி சமநிலை ஆனது.
சூப்பர் ஓவர்:
பும்ராஹ் வீசிய சூப்பர் ஓவரில் 17 ரன்கள் எடுத்தனர் நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள். கேன் வில்லியம்சன் 11(4) அடித்தார். இதை தொடர்ந்து ஆடிய இந்தியாவின் ரோஹித் சர்மா 15 (4) விளாச இந்திய 20 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இந்த தொடரை 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |