தொடரைக் கைப்பற்றியது இந்தியா..! சூப்பர் ஓவரில் ரோஹித் அதிரடி..! வில்லியம்சன் விளாசல் வீண்..!

0

இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று ஹாமில்டனில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்து இருந்தது.

இந்திய அணி சார்பில் கே.எல் ராகுல் 29 (17) ரன்களில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா சிறப்பாக ஆடி அரை சதம் கடந்து 65 (40) ரன்களில் ஆட்டமிழந்தார். சிவம் துபே 3 (7) ஏமாற்றம் தந்தார்.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோஹ்லி 38 (27), ஷ்ரேயஸ் ஐயர் 17 (16) விக்கெட்டுகளை இழந்தனர். மனிஷ் பாண்டே 14 (6), ஜடேஜா 10 (5) களத்தில் இருந்தனர்.
நியூஸிலாந்து அணியில் அதிகபட்சமாக பென்னெட் 3 விக்கெட் வீழ்த்தினார்.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இதைத்தொடர்ந்து நியூஸிலாந்து அணி 180 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது. நியூஸிலாந்து சார்பில் மார்ட்டின் குப்தில் 31 (21), காலின் முன்ரோ 14 (16) அவுட்டாகினர். பின்னர் சான்ட்னர் 9 (11) போல்டனார், கிராண்ட்ஹோம் 5 (12) நிலைக்கவில்லை. மறுபுறம் அதிரடியாக விளையாடிய கேப்டன் வில்லியம்சன் 95 (48) ரன்களில் அவுட்டானார்.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

20 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 179 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்திருந்தனர். ராஸ் டெய்லர் கடைசி பந்தில் போல்டு ஆனதால் போட்டி சமநிலை ஆனது.

சூப்பர் ஓவர்:

பும்ராஹ் வீசிய சூப்பர் ஓவரில் 17 ரன்கள் எடுத்தனர் நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள். கேன் வில்லியம்சன் 11(4) அடித்தார். இதை தொடர்ந்து ஆடிய இந்தியாவின் ரோஹித் சர்மா 15 (4) விளாச இந்திய 20 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இந்த தொடரை 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here