பெண்ணின் கர்ப்பகாலத்தில் 20வது வாரம் வரையில் மட்டுமே கருக்கலைப்பு செய்து கொள்ளும் அனுமதி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அதனை 24வது வாரமாக மாற்றிய சட்டத் திருத்தத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இந்திய அரசு 1971ம் ஆண்டு கொண்டு வந்த கருக்கலைப்பு சட்டத்தின் படி 20வது வாரம் வரை கருக்கலைப்பு செய்ய அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்த சட்டத்தில் திருத்தம் செய்து கருக்கலைப்புக்கான கால அளவை 20 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக நீட்டிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
இந்த வழக்கில் பதிலளித்த மத்திய அரசு 1971-ல் கொண்டு வரப்பட்ட மருத்துவ கருக்கலைப்பு சட்டம் திருத்தம் செய்யப்படும். இதுதொடர்பாக மருத்துவ கருக்கலைப்பு திருத்த சட்ட மசோதா 2020, எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. கால அளவை 20 வாரங்களில் இருந்து 24 வாரங்களாக உயர்த்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |