இந்தியா முழுவதும் இன்று (மே 25) ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.
ரம்ஜான் தொழுகை:
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்டு உள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மசூதிகள், பள்ளிவாசல்கள் அனைத்தும் பூட்டப்பட்டு உள்ளதால் முஸ்லீம்கள் அவரவர் வீடுகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து ரம்ஜான் தொழுகை நடத்தினர். வளைகுடா நாடுகளில் நேற்று (மே 24) ரம்ஜான் திருநாள் கொண்டாடப்பட்ட நிலையில் இந்தியாவில் இன்று கொண்டாடப்படுகிறது. அதையொட்டி பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில், ரமலான் திருநாள் அன்பு சகோதரத்துவம், அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளம். தனிநபர் இடைவெளியை பின்பற்றி பண்டிகையை கொண்டாடுங்கள் என தெரிவித்து உள்ளார்.
பிரதமர் மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தியை பதிவிட்டு உள்ளார். அதில் ‛ரம்ஜான் பண்டிகையால் இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம் மேலும் அதிகரிக்கட்டும். எல்லோரும் ஆரோக்கியமாகவும், வளமாகவும் இருக்க வாழ்த்துகள்’ என கூறியுள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |