கொரோனா வைரஸ் பாதித்தவர்களை குணப்படுத்தும் மருந்து ஒன்றை ரஷ்யா கண்டறிந்து உள்ளதாகவும், இன்னும் 8 வாரங்களில் அதற்கான பரிசோதனைகள் முடிந்து விடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரஷ்யாவில் கொரோனா:
ரஷ்யாவில் ஆரம்ப காலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருந்தது. ஆனால் தீடிரென விஸ்வரூபம் எடுத்த கொரோனவால் பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் அங்கு 3 லட்சத்து 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆனால் நம்பிக்கை அளிக்கும் விதமாக அங்கு உயிரிழப்புகள் குறைவாகவே உள்ளது. இதுவரை 3,500க்கும் மேற்பட்டோர் மட்டுமே உயிரிழந்து உள்ளனர்.
உலகமெங்கிலும் பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்கள் இந்த கொடிய கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக இறங்கி உள்ளனர். இந்த முயற்சியில் தன்னையும் சேர்த்துக்கொண்டு ரஷ்யாவில் உள்ள பாவிபிராவிர் மருந்து நிறுவனம், ‘அரேப்லிவிர்’ என்ற பெயரில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருந்து ஒன்றை கண்டறிந்து உள்ளது. இது குறித்த பரிசோதனைகள் 4 முதல் 8 வாரத்தில் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
முதலாவதாக நடுத்தர தீவிரத்தன்மை பாதிப்புள்ள நோயாளிகளுக்கு இந்த மருந்து கொடுத்து பரிசோதிக்கப்பட உள்ளதாக ரஷிய சுகாதார அமைச்சகத்தின் தலைமை சிறுநீரக மருத்துவரும், மருந்து ஆராய்ச்சிக்கு பொறுப்பேற்றுள்ள நிபுணருமான டிமிட்ரி புஷ்கர் கூறியுள்ளார். மேலும் கொரோனாவிற்கு ஒரு தடுப்பூசி உருவாக்கப்படுவதற்குள் இந்த மருந்து நிச்சயம் உருவாக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |